இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய சக இணையான ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பானின் ரேவா சகாப்தத் தொடக்கம் மற்றும் மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பு ஆகியவற்றின் பிறகு இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜப்பானியப் பேரரசர் நருஹிட்டோவின் முடிசூட்டு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வார் என்று பிரதமர் அறிவித்தார்.