இந்தக் குறியீட்டின் முதலாவது பதிப்பானது 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப் பட்டது.
இது உலகப் புத்தாக்கக் குறியீட்டின் வரிசையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குறியீட்டின் கீழ், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைத் திறனுள்ள வகையில் ஒப்பிடுவதற்காக அவை 17 பெரிய மாநிலங்களாகவும் 10 வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேச மாநிலங்களாகவும் 9 நகர்ப்புற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன.
நாட்டில் மிகவும் புத்தாக்கம் பெற்ற ஒரு பெரிய மாநிலமாக கர்நாடக மாநிலம் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதற்கு அடுத்து மகாராஷ்டிரா 2வது இடத்திலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தக் குறியீட்டில் பீகார் கடைசி இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு/மலைப் பிரதேச மாநிலங்களிடையே இமாச்சலப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒன்றியப் பிரதேச/நகர மாநிலங்களிடையே தில்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது.