TNPSC Thervupettagam

இந்திய மாநில அளவிலான நோய்த் தீவிர முன்னெடுப்பு

May 15 , 2020 1924 days 816 0
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்தியப் பொதுச் சுகாதார கூட்டமைப்பு ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் இறப்பு குறித்த மாவட்ட அளவிலான போக்குகள் மீதான தனது அறிக்கையை வழங்கி உள்ளது.
  • 2000 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குழந்தை இறப்பு விகிதமானது 49% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • குழந்தைகள் இறப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி ஆகியவை மேம்பட்டிருந்தாலும் இந்தியாவில் மாவட்டங்களுக்கிடையேயான பாகுபாடானது அதிகமாக உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பிற்கான முக்கியமான காரணங்கள் வயிற்றோட்ட நோய்கள், குறைப்பிரசவம், சுவாசத் தொற்றுப் பிரச்சினைகள், பிறப்பின் போதான குழந்தைகளின் குறைந்த எடை, பிறப்பின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்