TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை

January 2 , 2026 3 days 70 0
  • வங்கித் துறையில் வளர்ந்து வரும் அபாயங்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியாவில் வங்கிகளின் போக்குகள் மற்றும் முன்னேற்றம் 2023–24 என்ற அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
  • மொத்த வாராக் கடன்கள் (GNPA) ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2.7% ஆகவும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2.5% ஆகவும் குறைந்தது.
  • வங்கிகளில் அதிக லாபம் பதிவாகிய நிலையில், 2023–24 ஆம் நிதியாண்டில் (FY) சொத்துக்களின் மீதான வருமானம் (RoA) 1.4% ஆகவும், பங்குகளின் மீதான வருமானம் (RoE) 14.6% ஆகவும் இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் (SCBs) உள்ள மொத்த கடனில் 25.3% ஆக இருந்த அடமானமற்ற கடன்களின் பங்கு அதிகரித்து வருவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மேம்பட்ட சொத்து தரம் மற்றும் வளமான  மூலதன நிறைவு விகிதம் (CAR) ஆகியவற்றுடன் வலுவான கடன் வளர்ச்சியைக் காட்டின.
  • டிஜிட்டல் கடன் வழங்குவதில் நெறிமுறை சாரா வடிவங்கள் மற்றும் வங்கிகளில் அதிக ஊழியர் விலகல் ஆகியவற்றிலிருந்து செயல்பாட்டு நிலைத்தன்மையை பாதிக்கும் அபாயங்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்