இந்தியத் திறன்மிகு நகரங்கள் கண்காட்சி ஆனது, பசுமை கட்டிடங்கள், தூய எரிசக்தி, தூய சூழல், நீர், நகர்ப்புற இயக்கம் மற்றும் வளங்களை சரியான முறையில் மேம்படுத்துவதற்கும் நகரங்களைத் திறன்மிக்கதாகவும் நிலையானதாகவும் மாற்றச் செய்வதில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு போன்ற நகர்ப்புற மேம்பாட்டின் முக்கியத் தூண்களுடன் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது.
2022 ஆம் ஆண்டு இந்தியத் திறன்மிகு நகரங்கள் விருதுகள் என்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் துறைகளில் தனிநபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வணிக நிறுவனங்கள், நகராட்சிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை மதிப்பளித்து, அங்கீகரித்து, ஊக்குவிக்கும் ஒரு வகையான தளமாகும்.
சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகியவை தமிழகத்தின் 12 திறன்மிகு நகரங்களாகும்.