இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – இரண்டாவது மதிப்புமிக்க கடன் வழங்கும் நிறுவனம்
July 7 , 2021 1474 days 586 0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது இரண்டாவது மதிப்பு மிக்க பொதுத் துறை வங்கியாக உருவெடுத்துள்ளது.
இது 50,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதனத்தைப் பெற்றுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கு அவற்றைப் பின் தள்ளி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியானது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.