TNPSC Thervupettagam

இந்தியர்களின் குடியுரிமைத் துறப்பு

February 23 , 2023 872 days 408 0
  • 2022 ஆம் ஆண்டில் சுமார் 2.25 லட்சம் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்து உள்ளனர்.
  • இது 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.
  • சிறந்த வாய்ப்புகள், சுகாதாரம், வாழ்க்கைத் தரம் மற்றும் கல்வி போன்ற பல காரணிகளைத் தேடி, இந்தியர்கள், குறிப்பாக அதிகளவு நிகரச் சொத்து மதிப்புள்ள தனி நபர்கள் (HNI) புதிய கடவுச் சீட்டுகளுடன் மேற்குலக நாடுகளை நோக்கி இடம் பெயர்கிறார்கள் என்பது குறித்து இந்தத் தரவு எடுத்துரைக்கிறது.
  • அதிகளவு நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் 1 மில்லியன் டாலர் அல்லது 8.2 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருக்கும் நபர்கள் ஆவர்.
  • ஹென்லி உலக குடிமக்கள் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் 3.47 லட்சம் அதிகளவு நிகரச் சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் உள்ளனர்.
  • மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, சென்னை, குர்கான் மற்றும் அகமதாபாத் ஆகிய ஒன்பது நகரங்களில் மட்டும் 1.49 லட்சம் அதிகளவு நிகரச் சொத்து மதிப்புள்ள தனி நபர்கள் காணப் படுகின்றனர்.
  • உலக அளவில் தனி நபரிடம் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையடுத்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்