TNPSC Thervupettagam

இந்தியா - அமெரிக்க நாடுகளுக்கிடையேயான முதலாவது முப்படைகளுக்கான பயிற்சி

October 15 , 2018 2426 days 741 0
  • இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையேயான முதலாவது முப்படைகளுக்கான பயிற்சி நடைபெறவிருக்கிறது.
  • இரு நாடுகளின் அனைத்துப் படைகளும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளவிருக்கிறது. மேலும் சிறப்புப் படைகள் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
  • இந்தியாவுடனான முப்படைகளுக்கான பயிற்சியில் கலந்துகொள்ளும் இரண்டாவது நாடு அமெரிக்கா ஆகும். இந்தியாவுடனான முப்படைகளுக்கான பயிற்சியில் கலந்து கொண்ட முதல் நாடு இரஷ்யா ஆகும்.
  • ஏற்கெனவே இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஒவ்வொரு படைகளின் தனித்தனி பயிற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
    • இரு நாடுகளின் தரைப்படை - யுத் அபயாஸ் (வருடாந்திர பயிற்சி)
    • இரு நாடுகளின் கடற்படை - மலபார் (மேலும் ஜப்பானும் இதில் கலந்து கொண்டது)
    • வான் படைகள் - கோப் இந்தியா (இரு நாடுகளுக்கிடையேயான பயிற்சி)
  • ஆனால் முதன்முறையாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முப்படைகள் கூட்டாக இணைந்து இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்