இந்தியா-இங்கிலாந்து சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2026
February 16 , 2026 2 days 44 0
இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் புது தில்லியில் ஒரு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், 36 மாதங்கள் வரை ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இரட்டை சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஊழியர்களின் பரிமாற்றத்தை ஆதரிக்கிறது மேலும் குறுகிய கால வெளிநாட்டுப் பணிகளின் போது தொடர்ச்சியான சமூகப் பாதுகாப்பு பலன்களை உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு மேலும் இது விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்துடன் (CETA) அமலுக்கு வரும்.