TNPSC Thervupettagam

இந்தியா-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்க நிதி

January 23 , 2022 1241 days 454 0
  • இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து, சமீபத்தில் தங்களது எட்டாவது ஆளுகைக் குழுச் சந்திப்பின் போது I4F என்ற துறையை (இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி & மேம்பாட்டு தொழில்நுட்பப் புத்தாக்க நிதி) விரிவுபடுத்தின.
  • I4F என்பது இந்தியா - இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொழில் நுட்ப ப்புத்தாக்க நிதியாகும்.
  • இந்த நிதியானது, தற்போது 5.5 மில்லியன் அமெரிக்க டாலராக விரிவுபடுத்தப் பட்டு உள்ளது.
  • மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிதி விரிவு படுத்தப்பட்டுள்ளது.
  • அவை பின்வருமாறு
    • உடல்நலப் பாதுகாப்பில் மூலக்கூறு கண்டறிதலுக்காக வேண்டி, மத்திய அரசால் கண்காணிக்கப்படும் இணைய வசதியில் இயங்கும் நுண் உணர்விகள்.
    • நிகழ்நேர விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் தரவுச் சேகரிப்பில் இணைய வசதி கொண்ட செயற்கைக் கோள் தகவல்தொடர்பினைப் பயன்படுத்துதல்.
    • NoMoreMos: இது கொசுப் பரவலைக் கட்டுப்படுத்தும் உயிரியல் சார்ந்த தீர்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்