12வது இந்தியா கெம் (2022) நிகழ்வானது, இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதியியல் துறை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு: “குறிக்கோள் 2030: இந்தியாவைக் கட்டமைக்கும் திறன் கொண்ட வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறை” என்பது ஆகும்.
இந்திய கெம் என்ற நிகழ்வானது இந்திய அரசின் வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையின் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
இது இந்திய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையில் கவனம் செலுத்தும் மாபெரும் நிகழ்வாகும்.
இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தொழில்துறையின் மிகப்பெரியக் கூட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.