இந்தியா - சிங்கப்பூர் இடையிலான அரசுமுறைக் கூட்டாண்மை
September 10 , 2025 65 days 120 0
வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான/ஆழப்படுத்துவதற்கான ஓர் உத்தி சார் செயல் திட்டத்தினை வெளியிட்டு இந்தியாவும் சிங்கப்பூரும் அவற்றின் அரசுமுறை உறவுகளின் 60 ஆண்டுகால நிறைவினைக் கொண்டாடுகின்றன.
இந்தத் திட்டமானது, பசுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் நிதி உட்பட எட்டு முக்கியப் பகுதிகளில் அவற்றின் விரிவான உத்தி சார் கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.
இந்தக் கூட்டாண்மை, புதிய மாணவர் திட்டங்கள் மற்றும் சென்னையில் ஒரு தேசிய மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையத்துடன் மக்களிடையேயான உறவுகளை வலியுறுத்துகிறது.