இந்தியா - ஜெர்மனி உத்திசார் கூட்டாண்மையின் 25 ஆம் ஆண்டு நிறைவு
June 4 , 2025 2 days 31 0
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் உத்திசார் கூட்டாண்மையின் வெள்ளி விழாவை (25 ஆண்டுகள்) கொண்டாடியுள்ளன.
இரு நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையானது 2000 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இது பருவநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு சமகால உலகளாவியச் சவால்களைச் எதிர்கொள்ளும் வகையில் பரிணமித்து வருகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் 2,000க்கும் மேற்பட்ட ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் 750,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
தற்போது 50,000க்கும் மேற்பட்ட ஒரு அளவில் இந்திய மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்று வருகின்றனர், எனவே இந்தியா அந்நாட்டில் மிகப்பெரிய சர்வதேச மாணவர் விகிதத்தைக் கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியுடன் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்திய முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
மேலும் ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு வர்த்தகப் பங்களிப்பாளராகவும் ஜெர்மனி உள்ளது.