இந்தியா தன்னை "பறவைக் காய்ச்சல் அற்ற நாடாக" அறிவித்துள்ளது
September 7 , 2019 2116 days 374 0
இந்தியா பறவைக் காய்ச்சல் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சர்வதேச விலங்கு சுகாதாரத்திற்கான அமைப்பு – OIE ஆனது இந்த வைரஸ் பாதிப்பு அற்ற நாடாக இந்தியாவை அறிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் ஆனது முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிலிருந்து பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவும் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த நோய் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.
இந்தியா கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இந்த நோயற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்த நோய் பாதிப்புகளுக்குப் பிறகு, இந்தியா இரண்டாவது முறையாக இந்த நோயற்ற நாடாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.