நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டியான இந்திய திறன்கள் 2018 ஆனது புதுடெல்லியில் நடந்து முடிந்தது.
இந்திய திறன்கள் 2018 ஆனது பல்வேறு திறன்களில் சிறந்த செயல்திறனுடையவர்களை அடையாளம் காணவும், அவர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆகும்.
2019-ல் ரஷ்யாவின் கஸானில் நடைபெறவுள்ள 45வது உலக திறன்கள் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்னதாக இந்தப் போட்டிகளின் வெற்றியாளர்களில் சிலருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.