February 19 , 2026
4 days
64
- தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக வேண்டி இந்தியாவும் பிரான்சும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டைத் தொடங்கியுள்ளன.
- செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் குறித்து இதில் தலைவர்கள் விவாதித்தனர்.
- இந்தத் திட்டம் இரு நாடுகளின் புத்தொழில் நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
- டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் அடங்கும்.
- 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியா-பிரான்ஸ் மூலோபாயக் கூட்டாண்மை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதைத் தொடர்கிறது.
- இரு நாடுகளும் பாதுகாப்பான, நெறிமுறை சார்ந்த மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

Post Views:
64