இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே பெட்ரோலியக் குழாய்
September 11 , 2019 2113 days 623 0
பிரதமர் மோடியும் நேபாளத்தின் பிரதமரான கே பி ஷர்மா ஒலியும் காணொளி மூலம் மோதிகாரி மற்றும் அமேலக்கஞ்ச் ஆகியவற்றிற்கிடையே பெட்ரோலிய குழாய்ப் பாதையைத் (பைப்லைன்) திறந்து வைத்தனர்.
இது தெற்காசியாவின் முதலாவது எல்லை தாண்டிய பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் குழாய் ஆகும்.
69 கி.மீ தூரமுள்ள இந்த குழாயானது பீகாரின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தென்கிழக்கு நேபாளத்தின் அமேலக்கஞ்ச் வரை எரிபொருளைக் கொண்டு செல்லும்.
இது இந்தியாவில் இருந்து நிலத்தால் சூழப்பட்ட நேபாளத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான செலவைக் குறைக்க விருக்கின்றது.