இந்தியா மற்றும் பிரான்ஸ் - சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை
February 23 , 2026 51 days 109 0
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் இந்திய வருகையின் போது இந்தியாவும் பிரான்சும் தங்கள் உறவுகளை "சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை"யாக மேம்படுத்தின.
இந்தியாவும் பிரான்சும் 1998 ஆம் ஆண்டு ஒரு மேற்கத்திய நாட்டுடனான இந்தியாவின் முதல் மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தின.
புதிய கூட்டாண்மையானது பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, காலநிலை, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை உள்ளடக்கியது.
100 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளுடன் ஒத்துழைப்பை இணைக்க இரு நாடுகளும் Horizon 2047 எனும் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்துகின்றன.
மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்தாபூர் அணுமின் நிலையத் திட்டமும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பில் அடங்கும்.