இந்தியா- வங்க தேசம் ஆகியவற்றிற்கிடையேயான 2வது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி
October 13 , 2019 2123 days 635 0
இந்தியக் கடற்படை - வங்கதேசக் கடற்படை ஆகியவற்றிற்கிடையேயான ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி - 2019ன் (Coordinated Patrol - CORPAT) 2வது பதிப்பானது வடக்கு வங்காள விரிகுடாவில் நடத்தப் பட்டது.
விசாகப் பட்டினத்தில் இந்த இரு கடற்படைகளுக்கு இடையே நடைபெற்ற இப்பயிற்சியின் முதல் பதிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் CORPAT பயிற்சியானது நடைபெற இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கடற்படை - வங்கதேசக் கடற்படை ஆகியவற்றிற்கிடையேயான கார்பட் பயிற்சியானது கப்பல் செலுத்துத்திறன் வளர்ச்சி, ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்களுடன் பறக்கும் பயிற்சிகள், கடலில் ரோந்து விமானங்களில் செல்லுதல் ஆகியவற்றில் பங்கெடுக்கும் கடற்படையினருடன் இருதரப்புப் பயிற்சியாக இதனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.