இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு தூதரக உறவுகளின் 55வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டை "இந்தியா-வியட்நாம் நட்புறவு ஆண்டாக" அனுசரிக்க ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, வியட்நாம், இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையிலும், இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்தில் இந்தியாவின் 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வையிலும் ஒரு முக்கியப் பங்காளியாகும்.
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) உடனான நமது விரிவான உத்திசார் கூட்டாண்மை கட்டமைப்பிலும் வியட்நாம் ஒரு முக்கியப் பங்காளியாகும்.
இரு நாடுகளும் தங்களது உறவை மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தியுள்ளன.
இப்பிராந்தியத்தில் அந்த மட்டத்தில் நாம் இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ள முதல் நாடு வியட்நாம் ஆகும்.
பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணைகளை வழங்குவதற்காக வியட்நாமுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சிக்கு 'எக்சர்சைஸ் வின்பாக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.