TNPSC Thervupettagam

இந்தியாவின் "வெள்ளைத் தங்கம்" - பருத்தித் துறை

July 26 , 2026 12 hrs 0 min 39 0
  • நிலப்பரப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பருத்தி விளையும் நாடாகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாகவும் இந்தியாவின் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, "வெள்ளைத் தங்கம்: இந்தியாவின் பருத்திக் கதை" என்ற தலைப்பிலான உண்மை அறிக்கையை இந்திய அரசு வெளியிட்டது.
  • அங்கீகரிக்கப்பட்ட நான்கு பருத்தி இனங்களையும் பயிரிடும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான், மேலும் 2025-26 ஆம் ஆண்டில் 290.91 லட்சம் பேல்கள் பருத்தியை உற்பத்தி செய்துள்ளது (தற்காலிக தரவு).
  • பருத்தியானது உலகளாவிய நார் உற்பத்தியில் சுமார் 19% பங்களிக்கிறது மற்றும் கிட்டத்தட்ட 6 மில்லியன் பருத்தி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
  • 114.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யும் இந்தியா உலகளவில் முதலிடத்திலும், உற்பத்தி மற்றும் நுகர்வில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • பருத்தி உற்பத்தித்திறன் திட்டமானது 2031-ஆம் ஆண்டுக்குள் பருத்தி உற்பத்தியை சுமார் 297 லட்சம் பேல்களிலிருந்து 498 லட்சம் பேல்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்