இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனைத்து நாடுகளுக்குமான உயர்நிலை விவாதத்திற்குத் தலைமை ஏற்றார்.
பின்பு, கடல்சார் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் தலைமைத்துவ அறிக்கையினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (United Nations Security Council – UNSC) ஏற்றுக் கொண்டது.
UNSC அமைப்பின் உயர்நிலை விவாதத்திற்குத் தலைமை தாங்கிய முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பிரதமர் மோடி அவர்கள் பெற்றுள்ளார்.
இந்த உயர்நிலை விவாதத்தின் கருத்துரு, “கடல்சார் பாதுகாப்பின் மேம்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்பு” (Enhancing Maritime Security – A Case for International Cooperation) என்பதாகும்.
கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக 5 அம்சத் திட்டத்தினை பிரதமர் மோடி தாக்கல் செய்தார்.
அவை,
கடல் வர்த்தகத்திற்கானத் தடைகளை அகற்றுதல்
கடல்சார் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்தல்,
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கடற்கொள்ளை (அரசு சாராத நிறுவனங்கள்) ஆகியவற்றால் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்தல்.
கடல்வளங்களைப் பாதுகாத்தல்
முறையான கடல்சார் இணைப்பினை (உள்கட்டமைப்பு) ஊக்குவித்தல் ஆகும்.