இந்தியாவின் முதல் வணிக ரீதியான புவிக் கண்காணிப்பு (EO) செயற்கைக்கோள் திரளை உருவாக்குவதற்காக PixxelSpace india நிறுவனம் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தனியார் கூட்டமைப்பு ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 12 மேம்பட்ட EO செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்காக 1,200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய உள்ளது.
இந்த செயற்கைக்கோள் திரள் ஆனது, பருவநிலைக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவற்றை ஆதரிக்கும்.
இந்த முன்னெடுப்பானது, இந்தியா வெளிநாட்டுத் தரவுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பொது-தனியார் கூட்டாண்மையின் (PPP) கீழ் உள்நாட்டு விண்வெளித் துறையை மேம்படுத்தும்.