இந்தியாவின் நிதித் தொகுப்பானது முழுமையான அரசாங்கச் செலவிடல் அல்ல.
இந்த நிதித் தொகுப்பானது இந்திய ரிசர்வ் வங்கியின் செலவிடுதலையும் உள்ளடக்கியுள்ளது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP – Gross Domestic Product) செலவிடல் சதவீதத்தின் அடிப்படையில் அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளினால் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகைக்கு அடுத்த இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
எனினும், அதன் மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் நிதித் தொகுப்பானது 19வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பெர்க் போன்ற சிறிய பொருளாதார நாடுகள் முறையே 20.7% மற்றும் 19.2% என்ற அளவில் தங்களது GDPயில் 5 சதவிகித அளவிலான பங்கைச் செலவிடுகின்றன.
இந்தத் தரவரிசையானது பொருளியலறிஞர் செய்குன் எல்ஜினால் வெளியிடப்பட்ட கோவிட் – 19 பொருளாதார ஊக்கக் குறியீட்டில் உள்ள தரவுகளை ஆராய்ந்த பின்னரே தயாரிக்கப் பட்டது.
20 இலட்சம் கோடி மதிப்பிலான கொரானா வைரஸ் நோய்க்கு எதிரான ஊக்கத் தொகையானது கிரீஸ், நியூசிலாந்து, வியட்நாம், போர்ச்சுக்கல் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் GDPயை விட அதிகமாகும்.
இந்தியாவின் ஊக்கத் தொகையானது 284 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் பாகிஸ்தானின் GDPற்குச் சமமானதாகும்.
GDPயின் அடிப்படையில் G20 நாடுகளிடையே 5வது மிகப்பெரிய நிதித்தொகுப்பு இதுவாகும்.