2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், சந்தை மூலதனத்தில் சுமார் 1 டிரில்லியன் டாலர்கள் சேர்த்து 5.33 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளன.
சதவீதத்தின் அடிப்படையில், சந்தை மூலதனம் என்பது 21 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது உலகின் முதல் 10 பங்குச் சந்தைகளில் மிக உயர்ந்த அதிகரிப்பாகும்.
இந்த காலக் கட்டத்தில் அதன் சந்தை மூலதனம் சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளதுடன் உலகளவில் ஜெர்மனியானது, இந்தியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பெருமளவு இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றிற்குப் பிறகு தற்போது உலகளவில் ஐந்தாவது பெரியச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.