TNPSC Thervupettagam

இந்தியாவின் சுகாதார நிலை குறித்த அறிக்கை

January 4 , 2022 1236 days 744 0
  • நாட்டின் தற்போதைய நிலை இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட நிலை, அவசர மற்றும் விபத்துச் சிகிச்சை மையங்களின் நிலை என்று தலைப்பிடப்பட்ட இரு விரிவான அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
  • இது புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் அவசர மருத்துவ சிகிச்சைத் துறையினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
  • இந்த அறிக்கையானது நாட்டிலுள்ள இரண்டாம், மூன்றாம் மற்றும் மாவட்ட நிலை மருத்துவமனைகளிலுள்ள அவசர மற்றும் விபத்து சிகிச்சைகளின் நிலையை மதிப்பிட்டது.
  • இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில், 3% முதல் 5% படுக்கைகள் மட்டுமே அவசரப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • நாட்டிலுள்ள 88% மருத்துவமனைகள் தனக்கென்று அவசர ஊர்திகளைக் கொண்டு இருந்தாலும், அவற்றுள் 3% மட்டுமே அவசர ஊர்தியில் சேவையை வழங்குவதற்கான பயிற்சியினைப் பெற்ற பாராமெடிக்கல் துறையினரைக் கொண்டுள்ளன என்று  இந்த அறிக்கை கண்டறிந்தது.
  • சுமார் 94% மருத்துவமனைகள் நோயாளியின் அருகிலேயே போதிய சோதனைகளை மேற்கொள்ளும் சாதனங்கள் இன்றியும், 74% மருத்துவமனைகள் தனக்கென அவசர ஊர்தி சேவை இன்றியும் 68% மருத்துவமனைகள் அவசரத் துறைக்கென போதிய இட வசதி  இன்றியும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்