இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் 2025
June 8 , 2025 5 days 25 0
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) ஆனது வருடாந்திர இந்திய சுற்றுச்சூழல் நிலை குறித்த அறிக்கையை (2025) வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வேளாண்மை, பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாடு ஆகிய நான்கு கருப்பொருள் பகுதிகளில் 48 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, இந்த அறிக்கையானது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை தரவரிசைப்படுத்தியது.
ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் மற்றும் கோவா ஆகியவை சில தனிப்பட்டப் பிரிவுகளில் முதலிடத்தில் உள்ளன.
அனைத்து களங்களிலும் மிகவும் நிலையான செயல்திறன் கொண்ட மாநிலமாக எந்த மாநிலமும் இடம் பெறவில்லை.
சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆந்திரப் பிரதேசம் முன்னணியில் உள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் கோவா சிறந்த மாநிலமாக உருவெடுத்து உள்ளது.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை இதன் அனைத்துப் பிரிவுகளிலும் மோசமான தரவரிசையில் உள்ளன.
இந்தியாவின் பசுமை இல்ல வாயு உமிழ்வானது, 1970 ஆம் ஆண்டிலிருந்து, உலகளவில் 7.8 சதவீதம் என்ற மிக அதிகப் பங்கை எட்டியுள்ளது.