TNPSC Thervupettagam

இந்தியாவின் தரவுத் தரம் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

June 29 , 2025 15 hrs 0 min 73 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "India’s Data Imperative: The Pivot Towards Quality" என்ற தலைப்பிலான மூன்றாவது அறிக்கையினை வெளியிட்டது.
  • சிறந்த எண்ணிம நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்காக என்று தரவுத் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது.
  • தரவை அளவிட்டு மேம்படுத்தவும் உதவும் வகையில் தரவு-தர மதிப்புக் கட்டமைப்பு மற்றும் தரவு-தர மேலாண்மை திறன் கட்டமைப்பு போன்றச் செயற்கருவிகளை இது அறிமுகப்படுத்துகிறது.
  • இந்தியாவின் தரவு  சார் சூழல் அமைப்பில் ஆதார், UPI, ஆயுஷ்மான் பாரத் மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவில் 1.2 பில்லியன் கைபேசிப் பயனர்கள் மற்றும் 800 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர்.
  • மோசமான தரவுத் தரமானது பிழைகள் மற்றும் நகல்களின் காரணமாக 4 முதல் 7%  வரை அதிகப்படியான நலத்திட்டச் செலவினங்களுக்கு வழி வகுக்கிறது என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்