இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான புதிய எண்ணிம நடவடிக்கை
June 30 , 2025 12 hrs 0 min 16 0
இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசானது, புதிய எண்ணிமத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
அந்த முக்கியத் திட்டங்களில்,
SAGAR SETU-சாகர் சேது - துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் அணுகலுக்கான ஒரு தடையற்ற நிர்வாகம் – திறம் மிக்கப் போக்குவரத்து மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு,
சிறப்பு எண்ணிம மையம் (DCoE),
DRISHTI கட்டமைப்பு மற்றும்
கட்டணங்களின் தகவல் குறித்த ஆவணம் (SOR) ஆகியவை அடங்கும்.
இந்த முன்னெடுப்புகள் ஆனது துறைமுகங்களை நவீனமயமாக்குவதையும், கப்பல் போக்குவரத்தை மிகவும் திறம் மிக்கதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளன.
திறன் மிகு வகையிலான மற்றும் பசுமை சார் துறைமுகச் செயல்பாடுகளை உருவாக்குவதற்காக DCoE ஆனது செயற்கை நுண்ணறிவு (AI), இணைய உலகம் (IoT) மற்றும் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
வேகமான, நேரடி ஆவணங்களற்ற/காகிதமற்ற ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) செயல் முறைகளுக்காக SAGAR SETU 80க்கும் மேற்பட்ட துறைமுகங்களையும் 40 பங்குதாரர் நபர்களையும் இணைக்கிறது.
DRISHTI ஆனது 2030 ஆம் ஆண்டு கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டங்களின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது.
SOR ஆவணங்கள் என்பது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் துறைமுகக் கட்டணங்களைத் தரப் படுத்துகிறது.
அனைத்து முன்னெடுப்புகளும் 2030 ஆம் ஆண்டு கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டம் மற்றும் 2047 ஆம் ஆண்டில் அம்ரித காலம் ஆகியவற்றின் இலக்குகளுடன் ஒத்துப் போகின்றன.