TNPSC Thervupettagam

இந்தியாவின் பரபரப்பான கடல் சார் துறைமுகங்கள்

August 12 , 2025 6 days 52 0
  • இந்தியாவின் கடல்சார் துறையில், 2023 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்த சரக்குக் கையாளுதல் ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 855 மில்லியன் டன்களாக உயர்ந்தது.
  • பத்திரிகைத் தகவல் வாரியத்தின் (PIB) அறிக்கையின்படி, இது 4.3 சதவீத வருடாந்திர வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி முதல் ஐந்து பெரிய துறைமுகங்கள் மொத்தச் சரக்குகளில் 63.12 சதவீதத்தைக் கையாண்டதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுக ஆணையம் (PPA) 13.14 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு, மொத்தச் சரக்குகளில் 18.04 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
  • குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையம் (DPA) ஆனது இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் (VPA) மற்றும் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (SMP) ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடத்தைப் பிடித்துள்ளன.
  • முதல் பத்து இடங்களில், தமிழ்நாட்டில் உள்ள சென்னை துறைமுக ஆணையம் (7வது இடம்), காமராஜர் துறைமுக ஆணையம் (8வது இடம்), மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் (9வது இடம்) ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்