TNPSC Thervupettagam

இந்தியாவின் பருவநிலை சார்ந்த உறுதிப்பாடுகள்

August 17 , 2022 1075 days 529 0
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியா புதைபடிம எரிபொருளைச் சார்ந்திராமல் திறம்படச் செயல்படுதல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஆற்றல் அளிப்பதற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இந்தியா சார்ந்திருப்பதை துரிதப்படுத்துதல் போன்ற கிளாஸ்கோவில் இந்தியா அளித்த உறுதிமொழிகளை இந்தியா அங்கீகரித்துள்ளது.
  • இருப்பினும், இந்திய நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட உறுதிமொழிகள், அது உறுதி அளித்தவற்றை விட குறைவாகவே இருந்தன.

5 உறுதிப்பாடுகள்

  • 2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியா தனது புதைபடிமம் சாரா ஆற்றல் திறனை 500 GW ஆக உயர்த்தும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தினைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும்.
  • இந்தியா தற்போது முதல் 2030 ஆம் ஆண்டு வரை மொத்த கரியமில (கார்பன்) வாயு உமிழ்வினை  1 பில்லியன் டன்கள் வரை குறைக்கும்.
  • இந்தியா தனது கார்பன் செறிவினை, 2030 ஆம் ஆண்டிற்குள் 2005 ஆம் ஆண்டின் அளவில் இருந்து 45 சதவீதத்திற்கும் அதிகமான அளவு குறைக்கும்.
  • ஆற்றல் மூலங்களிலிருந்து வெளியாகும் நிகர கார்பன்டை ஆக்சைடு உமிழ்வானது 2070 ஆம் ஆண்டிற்குள் நிறுத்தப்படும், அல்லது, இந்தியா ‘நிகர சுழி’ உமிழ்வு என்ற இலக்கை எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்