TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் மேலாண்மைத் திறன்

April 20 , 2024 13 days 83 0
  • இந்திய அரசானது, முக்கியப் பிராந்தியங்களுடனான உத்திசார் உறவுகளை மிகவும் விரிவுபடுத்துவதற்கான அதன் மாபெரும் கொள்கை முன்னெடுப்பிற்கு ஏற்ப வேண்டி எத்தியோப்பியா, மொசாம்பிக், ஐவரி கோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளில் தனது பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உள்ளது.
  • பல ஆப்பிரிக்க நாடுகளானவை இந்திய இராணுவத் தளங்கள், உபகரணங்கள் மற்றும் வன்பொருட்கள் ஆகியவற்றினை வாங்குவதில் ஏற்கனவே ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன.
  • எனவே, தூது இணைஞர் இதில் ஒரு இடைநிலை அதிகாரியாகச் செயல்படுவார்.
  • ஓர் இராணுவ தூது இணைஞர் அல்லது பாதுகாப்பு தூது இணைஞர் என்பது ஓர் அரசு முறை உறவுகள் மேலாண்மை (பண்ணுறவாண்மை) சார்ந்த பல்வேறு பணிகளுடன், பெரும்பாலும் ஒரு தூதரகத்துடன் தொடர்புடைய ஓர் இராணுவ நிபுணர் அல்லது ஓர் இராணுவ அதிகாரியாவார்.
  • வழக்கமாக, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இந்தப் பதவியை வகிப்பர் என்ற நிலையில் ஓர் அரசு முறை உறவுகள் மேலாண்மை (பண்ணுறவாண்மை) சார்ந்த பணிகளில் பணியாற்றும் போது அந்த ஆணையத்தின் கட்டுப்பாட்டினைக் கொண்டு இருப்பர்.
  • இந்த அதிகாரி, சில சமயங்களில், நியமனம் செய்த அரசு மற்றும் ஒரு அதிகாரி நியமிக்கப் பட்டுள்ள நாடு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு தகவல் தொடர்பு ஊடகமாகவும் செயல்படுகிறார்.
  • கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது முதன்முறையாக இந்தியாவில் தனது அரசு முறைப் பணிகளுக்காக ஓர் இராணுவ தூது இணைஞரை நியமித்தது.
  • இந்தியக் காலாட்படை, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த மொத்தம் 16 பாதுகாப்புப் படை தூது இணைஞர்கள் விரைவில் தங்கள் பதவிகளை ஏற்க உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்