பியூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வானது, இந்தியாவில் “மகன்களின் மீதான பிறப்பிற்கான எதிர்பார்ப்பானது” குறைந்து வருவதாக சுட்டிக் காட்டியுள்ளது.
2011 ஆம் ஆண்டில் 100 சிறுமிகளுக்கு 111 ஆண்களாக இருந்த பிறப்பு நிலை பாலின விகிதம் ஆனது 2019-21 ஆம் ஆண்டில் 100 சிறுமிகளுக்கு 108 ஆண்களாகக் குறைந்து உள்ளது.
இந்தியாவில் 2010 ஆம் ஆண்டில் சுமார் 480,000 (4.8 லட்சம்) ஆக இருந்த "காணாமல் போகும்" பெண் குழந்தைகளின் வருடாந்திரச் சராசரி எண்ணிக்கையானது, 2019 ஆம் ஆண்டில் 410,000 (4.1 லட்சம்) ஆகக் குறைந்துள்ளது.
உலகெங்கிலும், ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் தோராயமாக 105 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை விட அதிகமாக பிறக்கின்றனர்.
1970 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் பாலின விகிதம் ஆனது 105-100 என்ற உலகச் சராசரிக்கு இணையாக இருந்தது.
இது 1980களின் முற்பகுதியில் 100 பெண் குழந்தைகளுக்கு 108 ஆண் குழந்தைகளாகவும், மேலும் 1990களில் 100 பெண் குழந்தைகளுக்கு 110 ஆண் குழந்தைகளாகவும் ஒரு எண்ணிக்கை நிலையினை எட்டியது.
2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு இடையில், ஒன்பது கோடி பெண் குழந்தைகளின் பிறப்புகளானது, பெண் பாலினம் காரணமான கருக் கலைப்புகளால் "தவிர்க்கப் பட்டுள்ளதாக" இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சமயம் வாரியான பாலினத் தேர்வு சார்ந்த ஆய்வு அறிக்கையானது, சீக்கியர் இனத்தில் இந்த இடைவெளி அதிகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்துக்களிடையே "தவிர்க்கப்பட்ட" பெண் குழந்தைப் பிறப்புகளின் பங்கு என்பது அவர்களின் மக்கள்தொகைப் பங்கை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 80% இந்துக்கள் உள்ள நிலையில், 87% அல்லது எட்டு கோடி பெண் குழந்தைகளின் பிறப்புகள் பாலினம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருக் கலைப்புகளால் "தவிர்க்கப்பட்டுள்ளதாக" இதில் மதிப்பிடப் பட்டுள்ளது.
நாட்டின் "தவிர்க்கப்பட்டுள்ள" பெண் குழந்தைகளின் பிறப்புகளில் 7% அல்லது தோராயமாக 5.9 லட்சம் பேர் முஸ்லிம் இனத்தவர் ஆவர்.
மக்கள் தொகையில் 2.3% ஆக உள்ள கிறிஸ்தவ இனத்தவர்கள் மேற்கொள்ளும் பாலினம் சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளின் மொத்த எண்ணிக்கை 0.6% அல்லது சுமார் 53,000 ஆக உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.