இந்தியா 2015 மற்றும் 2023க்கு இடையில் மலேரியா பாதிப்புகளைக் கிட்டத்தட்ட 80% குறைத்துள்ளதுடன், 2030 ஆம் ஆண்டுக்கான தனது ஒழிப்பு இலக்கை அடைவதற்கான பாதையில் உள்ளது.
தேசிய மலேரியா ஒழிப்பு கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், திரிபுரா (5.69) மற்றும் மிசோரம் (14.23) தவிர, 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 1,000 மக்கள் தொகைக்கு வருடாந்திர மலேரியா ஒட்டுண்ணி பாதிப்பு விகிதம் (API) 1க்கும் குறைவாக இருந்தது.
2025 ஆம் ஆண்டிற்குள், 23 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 160 மாவட்டங்கள் 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பூர்வீக மலேரியா பாதிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளன.