TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை

November 19 , 2025 2 days 56 0
  • கர்நாடகாவின் விஜயநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை JSW எனர்ஜி தொடங்கியுள்ளது.
  • இந்த மையம் JSW ஸ்டீல் நிறுவனத்தின் நேரடி ஆக்சிஜன் நீக்க இரும்பு அலகுக்கு ஆண்டிற்கு 3,800 டன் பசுமை ஹைட்ரஜனையும் ஆண்டிற்கு 30,000 டன் பசுமை ஆக்ஸிஜனையும் வழங்கும்.
  • இந்திய சூரிய மின் ஆற்றல் கழகத்தின் பசுமை ஹைட்ரஜன் மாற்றத்திற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தின் (SIGHT திட்டம்) கீழ் JSW எனர்ஜி நிறுவனத்தின் 6,800 டன் ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த விநியோக ஒப்பந்தம் அமைகிறது.
  • JSW எனர்ஜி மற்றும் JSW ஸ்டீல் ஆகியவை 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 85,000–90,000 டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் 720,000 டன் பசுமை ஆக்ஸிஜனை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்