மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தின் போராமணி புல்வெளிகளில் லாபிரிந்த் என்ற பெரிய வட்டக் கல் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இது தோராயமாக 50 அடிக்கு 50 அடி என்ற அளவு கொண்டது என்பதோடு மேலும் இது அசாதாரணமான 15 குவிந்த சுற்றுகளைக் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அமைப்பு சாதவாகன வம்ச காலத்தில் இந்தோ-ரோமானிய வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்னர் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான லாபிரிந்த்கள் (சுருள் புழைகள்) அதிகபட்சமாக 11 சுற்றுகளைக் கொண்டிருந்தன.
15 சுற்றுகளைக் கொண்ட இந்தப் புதிய கண்டுபிடிப்பு இந்தியாவின் மிகப்பெரிய வட்ட வடிவ லாபிரிந்த் ஆக அமைகிறது.
சாங்லி, சதாரா மற்றும் கோலாப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து இதே போன்ற ஆனால் சிறிய லாபிரிந்த்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரோமானிய வணிகர்கள் மற்றும் மசாலாப் பொருட்கள், ஜவுளி மற்றும் விலை மதிப்பு அற்ற கற்கள் போன்ற பொருட்களை வணிகம் செய்யும் உள்ளூர் வணிகர்களுக்கு லாபிரிந்த்கள் வழி செலுத்தலுக்கான குறிப்பான்களாகவோ அல்லது குறியீட்டு அடையாளங்களாகவோ செயல்பட்டிருக்கலாம்.