TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அகர்பத்தி தரநிலை

December 30 , 2025 15 hrs 0 min 45 0
  • இந்திய தரநிலைகள் வாரியம் (BIS) ஆனது, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவின் முதல் அகர்பத்தி (தூபக் குச்சி) தரநிலையை அறிவித்துள்ளது.
  • IS 19412:2025 என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தரநிலை அகர்பத்திப் பொருட்களுக்கு ஒரு சீரான தேசியக் கட்டமைப்பை வழங்குகிறது.
  • இது டிசம்பர் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் 2025 ஆம் ஆண்டு தேசிய நுகர்வோர் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் தரநிலை தீங்கு விளைவிக்கும் மற்றும் நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, வீடுகள் மற்றும் பொது இடங்களில் அதன் பாதுகாப்பானப் பயன்பாட்டை உறுதி செய்கிறது.
  • இது அகர்பத்தி உற்பத்திக்கான தரம், பாதுகாப்பு, மூலப்பொருள் மற்றும் செயல்திறன் தேவைகளை வகுக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்