இந்தியாவிலேயே முதன்முறையாக, சிலிக்கா ஏரியில் கழி/சேற்று நண்டு பிடித்தலுக்கு உலகளாவிய ஒரு நிலைத் தன்மை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
சிலிக்காவின் கழி நண்டு பிடித்தலுக்கு என கடல்சார் மேற்பார்வையாளர் சபை (MSC) சான்றிதழைப் பெறுவதற்கான கூட்டு முன்னெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்த மீன்வளமானது, வடகிழக்கு இந்தியாவில் பொருளாதார ரீதியாகவும் சுற்றுச் சூழல் ரீதியாகவும் முக்கியமானதாகும்.
இது MSC சான்றிதழுக்குப் பரிசீலிக்கப்படும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன் வளம் ஆகும்.
MSC என்பது ஒரு நிலையான மீன் பிடித்தலை ஊக்குவித்து, சான்றளிக்கும் ஒரு முக்கிய உலகளாவியத் திட்டமாகும்.
சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரியக் கடலோரக் காயலாகும் என்பதோடு மேலும் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்ட பல்லுயிர்ப் பெருக்க மையம் ஆகும்.