இந்தியாவின் முதல் கம்பிவடந்தாங்கி இரயில் பாலம்
May 4 , 2023
824 days
448
- "அஞ்சி காட் பாலம்" என்றழைக்கப்படும் நாட்டின் முதல் கம்பி வடந்தாங்கி இரயில் பாலமானது தற்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
- இந்தக் கம்பி வடந்தாங்கி இரயில் பாலமானது 96 கம்பிவடங்களைக் கொண்டுள்ள நிலையில் இதில் கம்பிவட இழைகளின் மொத்த நீளம் 653 கி.மீ. ஆகும்.
- இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள கத்ரா மற்றும் ரியாசி ஆகிய பகுதிகளை இந்திய இரயில்வே சேவை மூலம் இணைக்கும்.
- இந்தப் பாலமானது, "உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் இணைப்பு (USBRL) திட்டம்" என்ற தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப் பட்டது.

Post Views:
448