TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு நேர சுற்றுலாப் பூங்கா

January 9 , 2026 3 days 52 0
  • லக்னோ நகரின் வடக்குப் புறநகரில் உள்ள குக்ரெயில் வனப்பகுதியில் இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு சுற்றுலா வசதி/சஃபாரி நிறுவப்பட உள்ளது.
  • இந்த இரவு நேர சஃபாரி உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகர எல்லைக்குள் கட்டுப்படுத்தப் பட்ட இரவு நேர வனவிலங்குப் பார்வை அனுபவமாக இருக்கும்.
  • இது சிங்கப்பூர் இரவு நேர சஃபாரி மாதிரியால் ஈர்க்கப்பட்டு, இருள் நேரத்தில் வன விலங்குகளைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க கட்டுப்படுத்தப் பட்ட இயக்கம் மற்றும் குறைந்த செறிவுடைய விளக்குகள் கொண்ட இரவு நேர சஃபாரி பாதைகள் அடங்கும்.
  • இந்த மேம்பாடு குக்ரெயில் வனப்பகுதிக்குள் இருக்கும் முதலை, கங்கை நீர்முதலை மற்றும் ஆமை வளங்காப்பு மையங்களில் வசதிகளை மேம்படுத்தும்.
  • உள்கட்டமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதைகள், மூங்கில் குடிசைகள், இயற்கை வழியான நடைப்பயணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டி வழிகாட்டப்பட்ட கல்வித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்