TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் போர் விமானப் படைத் தலைவர் - பாவனா காந்த்

August 17 , 2026 2 days 96 0
  • இந்திய விமானப்படையின் முதல் பெண் 'டாப் கன்' (Top Gun) விமானியாகி பாவனா காந்த் வரலாறு படைத்துள்ளார்.
  • அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோருடன் இணைந்து, நாட்டின் முதல் பெண் போர் விமானிகள் குழுவின் ஒரு பகுதியாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர் இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார்.
  • 2019-ஆம் ஆண்டில், பகல் நேரப் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் விமானி ஆனார்.
  • 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முதல் பெண் போர் விமானி இவராவார்; பின்னர் 2024-ஆம் ஆண்டு குடியரசு தின விமான சாகச நிகழ்ச்சியிலும் (fly-past) இவர் பங்கேற்றார்.
  • குவாலியரில் உள்ள 'தந்திரோபாய மற்றும் வான்வழிப் போர் மேம்பாட்டு நிறுவனம்' (TACDE)-இல், மதிப்புமிக்க 'போர் விமானப் படைத் தலைவர்' (FCL) பயிற்சியை வெற்றிகரமாக முடித்த முதல் பெண் போர் விமானி இவராவார்.
  • இந்தப் பயிற்சி, அமெரிக்கக் கடற்படையின் "டாப் கன்" (Top Gun) பயிற்சிக்கு இணையானதாகக் கருதப்படுகிறது; இது அதிகாரப்பூர்வமாக 'ஸ்டிரைக் ஃபைட்டர் டாக்டிக்ஸ் இன்ஸ்ட்ரக்டர்' (Strike Fighter Tactics Instructor) திட்டம் என்று அழைக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்