இந்தியாவில் முதல் முறையாக, முதுமலை புலிகள் வளங்காப்பகமான தெப்பக்காடு யானை முகாமில் யானைப் பாகன்களுக்காக என 44 வீடுகள் கட்டப்பட்டு, யானைப் பாகன்கள் கிராமம் அமைக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் வளங்காப்பகம் ஆனது, சுமார் 681 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியைக் கொண்டுள்ளது.
முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் ஆனது ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்டது.
தெப்பக்காடு யானைகள் முகாம் ஆனது ஆசியாவின் பழமையான யானைகள் முகாம் ஆகும்.
இந்த யானைகள் முகாமில் தற்போது 27 யானைகள் உள்ளன.
இந்தியாவில் உள்ள யானைகள் முகாம்களில் யானைப் பாகன்களுக்கென எந்த ஒரு மாநில அரசும் வீடுகள் கட்டித் தரவில்லை.