இது ஒரு அலுவல்பூர்வமான ஆய்வு ஆகும். ஆனால் அரசால் இதன் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office’s - NSSO) வழக்கமான தொழிலாளர் பணிக்குழு ஆய்வு அறிக்கையின்படி 2017-18-ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 45 வருடத்தில் அதிக அளவாக 6.1 சதவிகிதத்தைத் தொட்டிருக்கின்றது.
பணமதிப்பிழக்கத்திற்குப் பிறகு அரசு நிறுவனத்தால் வேலைவாய்ப்பின்மை மீது எடுக்கப்பட்ட முதலாவது முழுமையான ஆய்வு இதுவாகும்.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை என்பது 7.8 சதவிகிதமாகவும் ஊரகப் பகுதிகளில் 5.3 சதவிகிதமாகவும் உள்ளது. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது.
1972-73-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதன் அதிக அளவில் இருந்தது.
ஊரக வேலைவாய்ப்பின்மையில் ஆண்களின் சதவிகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 17.4 சதவிகிதமாகவும் ஊரக வேலைவாய்ப்பின்மையில் பெண்களின் பங்கு 4.8 சதவிகிதத்திலிருந்து 13.6 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கின்றது.