பொருளாதார நன்மைகள் மற்றும் உமிழ்வுக் குறைப்பு ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு, நாடு தழுவிய அளவில் E20 பெட்ரோல் (20% எத்தனால் கலவை) அறிமுகத்தினை இந்தியா விரைவுபடுத்தியது.
கரும்பு மற்றும் தானியங்களிலிருந்துப் பெறப்படும் எத்தனால், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு, அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துகிறது (2025 ஆம் ஆண்டில் 43,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது).
E10 உடன் ஒப்பிடும்போது E20 ஆனது கார்பன் உமிழ்வை 30% வரை குறைக்கிறது; அதிக ஆக்டேன் உள்ளடக்கம் ஆனது எரிப்புத் திறனை மேம்படுத்துகிறது மற்றும் என்ஜினில் முறையற்ற எரிப்பு (என்ஜின் நாக்கிங்) நிகழ்வதைக் குறைக்கிறது.
ஆனால் நவீன கால கார்களில் எரிபொருள் திறன் 5-7% குறையக் கூடும்; பழைய வாகனங்களில் (BS3/BS4) 20% வரை குறையக் கூடும்.
இந்த எரிபொருள் பயன்பாட்டிற்குப் பொருந்தாத வாகனங்களில் எத்தனால் ஆனது இரப்பர் சீல்கள் மற்றும் பாகங்களைச் சேதப்படுத்தும் என்றாலும் அதற்கான பாகமாற்றுச் செலவுகள் குறைவாகவே இருக்கும்.
புதிய கார்கள் (BS6 கட்டம் 2, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிந்தைய மாதிரிகள்) பெரும்பாலும் E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன.
E20 பெட்ரோல் பயன்பாட்டிற்கான மாற்றத்தின் போது எத்தனாலுக்கு இணக்கமான பாகங்களின் வழக்கமான பராமரிப்பு மற்றும் பயன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அதிகாரிகள் E20 பெட்ரோலினை தூய்மையான மின்சாரப் போக்குவரத்தினை நோக்கிய "இணைப்பு எரிபொருள்" என்று அழைக்கின்றனர்.