இந்திய நாடானது, 2025 ஆம் ஆண்டிற்குள் eVTOL (மின்சாரத்தில் இயங்கக் கூடிய செங்குத்துக் கோணங்களில் மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும் வகையிலான) வாடகை விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த வாடகை விமானச் சேவைகளை அறிமுகப் படுத்தும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளன.
அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஜான்ட் ஏர் மொபிலிட்டி தனது வாடகை விமானத் தொகுப்பு அலகினை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது.