அகாசா ஏர் (Akasa Air) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (BPCL) ஆகியவை இணைந்து, வழக்கமான விமான எரிபொருளுடன் 1% நிலையான விமான எரிபொருளைக் (SAF) கலந்து இந்தியாவின் முதல் வர்த்தக விமானத்தை இயக்கி உள்ளன.
இவ்விமானம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவின் மனோஹர் சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கப் பட்டது.
விமானப் போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் 5% SAF எரிபொருள் கலவையை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
SAF என்பது நிலையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட விமான எரிபொருளாகும்; இதன் பரவலான பயன்பாடு இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆற்றல் மாற்ற இலக்குகளுக்கு உறுதுணையாக இருக்கும்.