உள்நாட்டு புலம்பெயர்வுக் கண்காணிப்பு மையமானது (IDMC), 2024 ஆம் ஆண்டு உலகளாவிய உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.4 மில்லியன் புலம்பெயர்வுகள் பதிவாகின என்ற ஒரு நிலையில் பெரும் வெள்ளப் பாதிப்புகளானது அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு புலம் பெயர்வினை ஏற்படுத்தியதுடன், இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத ஒரு அளவிற்கு அதிகமாகும்.
வன்முறை காரணமாக ஏற்பட்ட 1,700 புலம்பெயர்வுகளில், மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் சுமார் 1,000 என்ற அளவு புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளதுடன், அத்தகையப் புலம்பெயர்வுகளுக்கான முக்கிய இடமாக உள்ளது.
உள்நாட்டுப் புலம்பெயர்வு குறித்தத் தரவுகள் மற்றும் பகுப்பாய்விற்கான உலகின் முன்னணி ஆதாரமாக IDMC உள்ளது.
இது நார்வே அகதிகள் சபையின் (NRC) ஒரு பகுதியாக 1998 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
1951 ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கையிலோ அல்லது அதன் 1967 ஆம் ஆண்டு அகதிகள் பாதுகாப்பு நெறிமுறையிலோ இந்தியா கையெழுத்திடவில்லை.
புலம்பெயர்வு குறித்த உலகளாவிய ஒப்பந்தம் (2018) ஆனது, பருவநிலை சார்ந்த இடப் பெயர்ச்சியைக் குறிப்பிட்டாலும், அது பிணைப்பு சார்ந்த ஒப்பந்தம் இல்லை.