TNPSC Thervupettagam

இந்தியாவில் உள்நாட்டுப் புலம்பெயர்வுகள்

May 18 , 2025 23 days 64 0
  • உள்நாட்டு புலம்பெயர்வுக் கண்காணிப்பு மையமானது (IDMC), 2024 ஆம் ஆண்டு உலகளாவிய உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5.4 மில்லியன் புலம்பெயர்வுகள் பதிவாகின என்ற ஒரு நிலையில் பெரும் வெள்ளப் பாதிப்புகளானது அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு புலம் பெயர்வினை ஏற்படுத்தியதுடன், இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத ஒரு அளவிற்கு அதிகமாகும்.
  • வன்முறை காரணமாக ஏற்பட்ட 1,700 புலம்பெயர்வுகளில், மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் சுமார் 1,000 என்ற அளவு புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளதுடன், அத்தகையப் புலம்பெயர்வுகளுக்கான முக்கிய இடமாக உள்ளது.
  • உள்நாட்டுப் புலம்பெயர்வு குறித்தத் தரவுகள் மற்றும் பகுப்பாய்விற்கான உலகின் முன்னணி ஆதாரமாக IDMC உள்ளது.
  • இது நார்வே அகதிகள் சபையின் (NRC) ஒரு பகுதியாக 1998 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • 1951 ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கையிலோ அல்லது அதன் 1967 ஆம் ஆண்டு அகதிகள் பாதுகாப்பு நெறிமுறையிலோ இந்தியா கையெழுத்திடவில்லை.
  • புலம்பெயர்வு குறித்த உலகளாவிய ஒப்பந்தம் (2018) ஆனது, பருவநிலை சார்ந்த இடப் பெயர்ச்சியைக் குறிப்பிட்டாலும், அது பிணைப்பு சார்ந்த ஒப்பந்தம் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்