கடந்த 60 ஆண்டுகளில் ஊடுருவும் அயல்நாட்டு இனங்களால் இந்தியா 127.3 பில்லியன் டாலர் (830 கோடி ரூபாய்) இழந்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் ஊடுருவும் அயல்நாட்டு உயிரினங்களால் நிதி ரீதியாக மிக அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியாவினை இடம் பெறச் செய்கிறது.
ஆனால் இந்தத் தரவானது, இந்தியாவில் அறியப்பட்ட 2,000+ அயல்நாட்டு உயிரினங்களில் இருந்து 10 ஊடுருவல் அயல்நாட்டு உயிரினங்களின் கணக்கிடப்பட்டச் செலவுகளிலிருந்து மட்டுமே வருகிறது.
ஆனால் மிகவும் பழமைவாத முறையிலான மதிப்பீடுகள் ஆனது, சுமார் 173 ஊடுருவல் தாவரங்களையும், 157 ஊடுருவல் விலங்குகளையும் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில், இந்த அயல்நாட்டு உயிரினங்களை ஊடுருவல் இனமாக அறிவிப்பது 2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.