19 பெருநகரங்களில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் குற்றங்களின் கீழ் அதிகமான குற்ற அறிக்கையைப் பதிவு செய்த நகரங்கள் சூரத் (96.7%), கோயம்புத்தூர் (96.6%) மற்றும் அகமதாபாத் (96.3%) ஆகியனவாகும்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அசாம் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக மிக அதிக குற்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு 100,000 மக்கள்தொகைக்கும் எத்தனை குற்றங்கள் என்ற விகிதத்தில் இந்த எண்ணிக்கை கணக்கிடப் படுகிறது.
ஒடிசா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகியவை குற்றங்களில் அதிக உயர்வைக் கண்டு உள்ளன.
இதில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பெருநகரப் பிரிவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ முதலிடத்தில் உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைந்த எண்ணிக்கையோடு கோவை 1வது இடத்தையும், சென்னை 2வது இடத்தையும், கேரளாவின் கொச்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
பாலியல் வன்புணர்வில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ள ராஜஸ்தானைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
2020 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களிலும், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் "கணவர் அல்லது உறவினர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட" பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
உத்தரப் பிரதேசம் (31) மற்றும் மத்தியப் பிரதேசம் (27) ஆகியவை வன்புணர்வு - கொலை/கூட்டு வன்புணர்வு என்ற பிரிவில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.
வரதட்சணை காரணமான இறப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் பட்டியலினச் சாதியினருக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாக பதிவாகியுள்ளன.
நகரங்களில், கான்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அதிக விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.
கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பட்டியலினப் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன.