கூகுள் நிறுவனமானது அதன் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது என்ற நிலையில் அமெரிக்காவிற்கு வெளியே இந்த ஒரு வசதியினைப் பெறும் வேறொரு முதல் நாடு இந்தியாவாகும்.
இது உரை, படங்கள் மற்றும் இணைய தள இணைப்புகளைப் பயன்படுத்தி ஆங்கில மொழியில் விரிவான பதில்களை வழங்குகிறது.
இந்தப் புதிய தேடல் முறைமையானது கூகுள் நிறுவனத்தின் ஜெமினி 2.5 செயற்கை நுண்ணறிவு மாதிரியினால் இயக்கப்படுகிறது.
இது 'query fan-out' (ஒற்றைப் பயனரின் குறைகளை சிறு பிரிவுகளாகப் பிரித்து கையாளுதல்) என்ற முறையைப் பயன்படுத்துகிறது.
அதாவது இது ஒரு வினவலை பல பகுதிகளாகப் பிரித்து, இணையத்தில் தேடி, சிறந்தப் பதில்களை ஒருங்கிணைக்கிறது.
தற்போது சோதனை வழி பயன்பாட்டில் உள்ள இந்த அம்சம் ஆனது தேர்ந்தெடுக்கப் பட்ட பயனர்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது.